வியாழன், 28 அக்டோபர், 2010

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...

வரலாற்றை திருத்தி எழுத முடியுமா?

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் ஒரு ஓவியர் வடிவேலுவை படம் வரைந்து கொண்டிருப்பார். வடிவேலுவின் தலையும், இன்னொருவருடைய உடலையும் சேர்த்து, ஏதோ புஜ பல பராக்கிரமசாலியை போல ஓவியம் அருமையாக வரையப்பட்டிருக்கும். பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும்.

அப்போது, வடிவேலுவிடம் அமைச்சர் மங்குணி பாண்டியன் (அமைச்சர் அன்பழகன் மாதிரி) கேட்பார். எதற்காக அரசே இப்படி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று. அதற்கு வடிவேலு சொல்லுவார், இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு வரப்போகும் மாங்கா மடையர்களுக்கு என்ன தெரியப் போகிறது. அவர்கள் அனைவரும் மாமன்னர் 23-ம் புலிகேசி ஒரு மாவீரச் சக்கரவர்த்தி என்று நினைப்பார்கள். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என்று சொல்லுவார்.

அப்படித்தான் இன்று தமிழ்நாட்டிலும் வரலாறு மிக முக்கியம் என்று ஒரு புலிகேசி செய்து கொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாரும் இல்லை. நமது தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதிதான்.




தி.மு.க. என்று ஒரு பெரிய கொள்ளை கும்பலை அண்ணாத்துரை ஆரம்பித்தார். இது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு. ஆனால் அந்த கொள்ளை கும்பலை கருணாநிதி எப்படி கைப்பற்றினார் என்பது கருணாநிதிக்கு மட்டுமே தெரிந்த வரலாறு.

தமிழகத்தை விஞ்ஞானப்பூர்வமாக கொள்ளையடித்து சொத்துக்களை குவித்து விட்டார். ஆனால் வரலாற்றை பொறுத்த வரையில் இலவச திட்டங்கள், 1 ரூபாய் அரிசி என்று மக்களை ஏமாற்றி, தன்னை ஒரு கொடை வள்ளல் போலவே காட்டிக் கொள்கிறார்.

தி.மு.க. கொள்ளை கூட்ட தலைவர் அண்ணா இறந்தபொழுது, அவருக்கு அடுத்தபடியாக நெடுஞ்செழியன் தான் அந்த கொள்ளை கூட்டத்தில், முதல் அமைச்சர் பொறுப்புக்கு தகுதியானவராக இருந்தார். தற்காலிக முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்றார். அந்த காலத்தில், கட்சியில் அண்ணாவுக்கு அடுத்தபடியாக இருந்த ஐம்பெரும் தலைவர்களில் கூட கருணாநிதியின் பெயர் கிடையாது. இன்று அந்த கட்சியின் பெரும் தலைவர்கள் பட்டியலில் இவருடைய குடும்பத்தினரை தவிர வேறு யாருமே கிடையாது.

கட்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்த எம்.ஜி.ஆரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நெடுஞ்செழியனை ஏமாற்றி விட்டு குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்தார். இப்போது, அதைப்பற்றி கேட்டால், ஆட்சிக்கு வரவேண்டும் என்று தனக்கு விருப்பமே கிடையாது என்று வாய்கூசாமல் பொய் சொல்லுவார். நான் ஆட்சிக்க வரவேண்டும் என்று பெரியார் விரும்பினார், நெடுஞ்செழியன் விரும்பினார், எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று தனது பட்டியலை நீட்டிக்கொண்டே போவார். இந்த தகவல் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்து விடாமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார்.


                                  


இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருந்தபோது, இவர் இங்கிருந்து கடிதம் எழுதிக் கொண்டு இருந்தார். எதற்காக, பிற்காலத்தில் நான் இலங்கை தமிழர்களுக்காக இத்தனை கடிதம் எழுதினேன் என்று எடுத்துக் காட்டுவதற்காகத் தான். பேச்சுகள் நாளடைவில் மறைந்து விடும். ஆனால் கடிதங்கள் ஒரு அத்தாட்சியாக எப்பொழுதும் பயன்படும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்.

இதைவிட கொடுமை என்னவென்றால், இலங்கையில் இறுதிகட்ட போரின்போது, காலை சாப்பாட்டுக்கும் மதியசாப்பாட்டுக்கும் இடையில் ஒரு உண்ணாவிரத போராட்டத்தை அருமையாக நடத்தினார்.

அந்த போராட்டத்தைக் கூட, உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி இருந்தால் அவரை பாராட்டுவதில் தவறில்லை. 86 வயது முதியவர், சுடுகாட்டுக்கு போகும் வயதில், தள்ளுவண்டியில் வந்து உண்ணாவிரதம் இருந்தார் என்றால் ஆச்சரியப்படக் கூடியது தான். பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் தனது அரசியல் லாபத்துக்காக அந்த நாடகத்தை நடத்தினார். இதுகூட உண்மையா என்பது சந்தேகமே.

வீட்டில் நடந்த பிரச்சினைக்காக தனது பொண்டாட்டி, பிள்ளைகளிடம் சண்டை போட்டுக் கொண்டு உண்ணாவிரதம் இருக்க வந்ததாக கூட ஒரு செய்தி உண்டு. எது எப்படியோ? அப்போதைக்கு அவருடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை தமிழர்கள் கிடைத்து விட்டனர். அதை வைத்து அரசியலும் நடத்தி விட்டார்.

மொத்தத்தில், தனது வீட்டு பிரச்சினைக்காக, உண்ணாவிரதம் என்ற பெயரில் அருமையான நாடகம் ஒன்றை நடத்தி ஒட்டு மொத்த தமிழ் மக்களையும், முட்டாள் ஆக்கி விட்டார்.


யாராவது இவரை குறை சொல்லி விட்டால், நான் அந்த காலத்தில் இலங்கை தமிழர்களுக்காக எப்படி எல்லாம் போராடினேன் என்று புராணம் பாட ஆரம்பித்து விடுவார். அதற்கு உதாரணமாக முரசொலியில் வெளிவந்த ஏதாவது ஒரு செய்தியின் பழைய பேப்பர் கட்டிங்கை எடுத்து காட்டி, முழு பக்கத்துக்கு அறிக்கை கொடுக்க ஆரம்பித்து விடுவார்.


அந்த காலத்தில், மத்திய அரசு இவருடைய ஆட்சியை கலைத்ததற்கு காரணம், இவர் விஞ்ஞான பூர்வமான முறையில் ஊழல் செய்கிறார் என்று நீதிபதி சர்க்காரியா கமிஷன் கொடுத்த அறிக்கைதான். ஆனால் அதைக்கூட இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ததால் தான் ஆட்சி போனது என்று எல்லோரையும் நம்ப வைத்து விட்டார். அதைப் பற்றி இன்றுவரை சொல்லிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்.

இதேபோல, சமீபத்தில் லயோலா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இவர் பேசியபோது, நேருவைப் பற்றி தான் அந்த காலத்திலேயே எழுதி வைத்த கவிதையை பக்கம் பக்கமாக வாசித்தார். நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று சொன்னார்.

ஆனால், மதுரையில் நேருவுக்கு கறுப்பு கொடி காட்டி, செருப்பை விட்டெறிந்ததை மட்டும் சொல்லாமல் விட்டு விட்டார்.

அவசர நிலைக்காலத்துக்குப் பின்னர் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தலைவி இந்திராகாந்தி, மதுரைக்கு வந்தபோது மதுரை தெற்குவாசலில் அவரைக் கொல்ல முயற்சித்த கொடுமையையும் இவர் சொல்லவில்லை. இவற்றையும் சொல்லி இருந்தால் தெரிந்திருக்கும் கருணாநிதிக்கும் நேரு குடும்பத்துக்கும் உள்ள உறவு.

இந்திராவின் உயிரைக் காப்பாற்றிய பழ.நெடுமாறனும், என்.எஸ்.வி. சித்தனும் நல்ல சில காங்கிரஸ்காரர்களும் இன்றும் அதற்குச் சாட்சியாக உள்ளனர். ஆனால், இந்த சம்பவம் இன்றைய தலைமுறையினர் நிறைய பேருக்கு தெரியாது.


ஒன்றும் வேண்டாம், கடந்த ஆண்டு சட்டசபை பொன்விழா மலர் வெளியிடப் பட்டது. அந்த பொன் விழா மலரில், சட்டசபையில் இவர் ஆற்றிய உரைகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. இல்லையென்றால், இவரை பாராட்டி யாராவது புகழ்ந்து பேசியிருந்த உரைகளும் இடம் பெற்றிருந்தன. ஆனால் எதிர்கட்சி தலைவர்கள் யாருடைய உரைகளும் அந்த மலரில் வெளியிடப்படவில்லை.


இவருடைய 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆர். பேசிய உரைகள் கூட இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அனைவருடைய பேச்சுக்களும் இருந்தால்தானே, வருங்கால தலைமுறைகளுக்கு உண்மை தெரியும். அதனால்தான் திட்டமிட்டே தனக்கு துதி பாடியவர்கள் தவிர மற்ற அனைவருடைய பேச்சுகளையும் நீக்கி விட்டார். அந்த அளவிற்கு அந்த காலத்திலிருந்தே வரலாறு மிக முக்கியம் என்று திருத்திக் கொண்டே வருகிறார். பச்சை நிறம் தான் இல்லையே ஒழிய பச்சோந்திக்கு உண்டான அத்தனை குணங்களும் இவருக்கு உண்டு.

ஆக, வரலாற்றை முற்றிலுமாக திருத்தி எழுதி தன்னை ஒரு புஜ பல பராக்கிரமசாலியை போல காட்டிக் கொள்ள முயன்று விட்டார் என்பது மட்டுமே தெளிவான உண்மை. பிற்காலத்தில் வரப்போகும் மாங்கா மடையர்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று வடிவேலு சொன்னதைப் போலவே, நடக்கப்போகிறது.


கருணாநிதிக்கு வரலாற்றை திருத்தி எழுதுவதற்கு நீண்ட காலம் கிடைத்திருக்கிறது. ஏறக்குறைய 5 முறை முதல் அமைச்சராகி விட்டார். ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது, நிர்வாகத்தை சரியாக நடத்துகிறாரோ, இல்லையோ, வரலாற்றை மட்டும் நேர்த்தியாக திருத்திக் கொண்டிருக்கிறார்.


இதுவரையில் ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேலாக வரலாற்றை திருத்தி எழுதி விட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் மிச்சம் உள்ளதையும் முடித்து விடுவார்.

உதாரணமாக இவர்களுடைய கொள்ளை கம்பெனியின், அதிகாரப்பூர்வ செய்தித் தாளான  முரசொலியை எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைய செய்தி நாளைய வரலாறு. இதுதான் இவங்க கம்பெனியோட கொள்கை. இதிலிருந்தே, இவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எது எப்படி இருந்தாலும் வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...
----------------------

திங்கள், 18 அக்டோபர், 2010

என்னை கடலில் போட்டாலும், நான் தொல்லை கொடுப்பேன்-கருணாநிதி

தமிழர்களே, தமிழர்களே நீங்கள் கருணாநிதியின் கை, கால்களை கட்டி கடலில் தூக்கிப் போட்டாலும், அவர் உங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு தான் இருப்பார்.

அதற்கு உதாரணமாக மதுரை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா சொன்ன தீயசக்தி கருணாநிதியின் கதை.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு ஒரு மெல்லிய நீரோடையாக ஊருக்கே உழைக்க வேண்டும் என்கிற ஊழியச் சிந்தனையோடு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும்; அவருக்குப் பின் ராஜபாளையம் குமாரசாமி ராஜாவும்; மூதறிஞர் ராஜாஜியும்; பெருந்தலைவர் காமராஜரும்; பெரியவர் பக்தவத்சலமும்; அவருக்குப் பின் பேரறிஞர் அண்ணாவும்; அதன் பின் பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும்; அதற்குப் பின் நானும் தமிழகத்தை ஆண்ட போது, இந்தத் தமிழகம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் பின்னோக்கிப் பாருங்கள்.  இதை விளக்குவதற்கு ஒரு கதையை இங்கே நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.

நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்தனர்.   அந்த கிராமத்திற்கு யார் செல்ல வேண்டுமானாலும் அல்லது அந்த ஊர் மக்கள் மற்ற ஊர்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் பரிசல் மூலம் தான் பயணம் செய்ய முடியும்.  தினமும் காலையில் ஒரு பரிசல்காரன் அந்த கிராமத்தில் இருந்து பரிசல் ஓட்டி தன் பரிசலிலே ஆட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு அக்கரைக்கு போவான். 

அது போல இருட்டுவதற்கு முன்பு மாலை 6 மணி அளவில் அதே பரிசல் ஓட்டி அக்கரையில் இருந்து அந்தக் கிராமத்திற்கு பரிசலை செலுத்துவான். அப்படித் தான் ஒரு நாள் பரிசலோட்டி பரிசலை கொண்டு வந்து நிறுத்தி ஆட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு இருந்தான்.  அந்தக் கிராமத்தில் இருந்து வெளியூருக்குச் சென்று விளக்குமாறு விற்கும் பெண் ஒருத்தி தான் விற்றது போக மிச்சம் உள்ள விளக்குமாறு கற்றைகளை கையில் பிடித்துக் கொண்டு பரிசலில் ஏறி அமர்ந்தாள்.  அவள் அருகே குரங்கு வித்தை காட்டும் ஒருவன் குரங்கோடு பரிசலில் ஏறி அமர்ந்தான்.   அது போலவே பாம்பாட்டி ஒருவனும் கூடை நிறைய பாம்புகளை வைத்துக் கொண்டு பரிசலில் ஏறி உட்கார்ந்தான்.  இது போல அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களும் பரிசலில்  அமர்ந்துவிட்டார்கள்.   பரிசல் புறப்பட தயாரானது. 

அப்போது ஒருவன் ஓடி வந்து பரிசலிலே ஏற முயற்சித்தான்.  ஆனால் பரிசல்காரன் அவனை ஏற்ற மறுத்து "ஒழுங்காக போய்விடு.  உன்னை ஏற்ற முடியாது" என்று மறுத்தான்.  அவனோ, நானும் ஏறிக்கொள்வேன் என்று அடம் பிடித்தான். 

பரிசலில் இருந்த கிராமத்துக்காரர்கள் பரிசல் ஓட்டியிடம், அவனும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவன் தானே? உனக்குரிய கூலியைத்தான் தருகிறானே? அவனை ஏற்றிக் கொண்டால் என்ன? என்று கேட்டார்கள்.

உடனே பரிசல்காரன் சொன்னான் "அய்யோ, உங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாது.  கொடூர புத்தியும் எந்நேரமும் பிறருக்கு தீங்கு செய்யக்கூடிய விஷமச் சிந்தனையும் கொண்ட மோசமான தீயசக்தி அவன்.  பரிசல் இங்கிருந்து ஊர் போய்ச் சேருவதற்குள் எதையாவது செய்து நமக்கு ஆபத்தை விளைவித்துவிடுவான்.  நீங்கள் அவனுக்கு ஆதரவாக பேசாதீர்கள்" என்று மன்றாடினான். 
 
ஆனால், அந்தப் பரிசலில் இருந்த கிராமத்துக்காரர்கள் "உனக்கு அந்த பயம் வேண்டாம்.  நாங்கள் வேண்டுமானால் அவனது கையையும் காலையும் கட்டி பரிசலிலே போட்டு விடுகிறோம்.  அவனால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது.  நமது பயணத்திற்கும் ஆபத்து வராது" என்று பரிசல் ஓட்டியிடம் ஆலோசனை சொன்னார்கள். 

அப்போது பரிசல் ஓட்டி "அய்யோ! இவன் மிக மோசமானவன்.  கை, கால்களை கட்டிப் போட்டாலும் அவனால் கெட்டது செய்யாமல் இருக்க முடியாது" என்று முடிந்தவரை மறுத்தான். 
   
ஆனால், ஒட்டுமொத்த கிராமத்து மக்களும் ஒருவனை மட்டும் விட்டுவிட்டுப் போவதில் நியாயமில்லை என்று பரிசல்காரனை ஒருவழியாக சமாதானம் செய்துவிட்டு அந்த நபருடைய கைகளையும், கால்களையும் கட்டி அவனைத் தூக்கி உள்ளே போட்டுவிட்டு பரிசலை நகர்த்தச் சொன்னார்கள். பரிசல்காரன் அரைகுறை மனதோடு பரிசலை ஓட்டத் தொடங்கினான்.  ஏறத்தாழ இரண்டு மைல் அளவுக்கு பரிசல் கடந்து நடு ஆற்றைத் தொட்டது.

இன்னும் பாதி அளவு பயணத்தை கடக்க வேண்டும். மேகம் திரண்டு கொண்டு வந்தது.  காற்றும், மழையும் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. 

இந்தத் தருணத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினான் அந்தத் தீயசக்தி.  விளக்குமாறு கற்றைகளை பக்கத்தில் வைத்த வண்ணம் அருகில் உட்கார்ந்து கொண்டு இருந்த பெண்ணிடமிருந்து ஒரு விளக்குமாறு குச்சியை தனது வாயாலே கடித்து உருவினான்.  வாயில் வைத்திருந்த குச்சியை வைத்து குரங்காட்டியின் மடியில் உட்கார்ந்திருந்த குரங்கின் கண்ணிலே கொண்டு போய் குத்தினான்.  குரங்கு மிரண்டு பாம்பாட்டி அடுக்கி வைத்திருந்த பாம்புக் கூடையின் மீது விழுந்தது.  உடனே பாம்புக் கூடை சரிந்து உள்ளிருந்த பாம்புகள் அனைத்தும் பரிசலுக்குள்ளே விழுந்து ஓட, பரிசலில் பயணம் செய்த அனைவரும் அய்யோ!, அம்மா! என்று அலறி ஒரு புறமாய் ஒதுங்க பரிசல் கவிழ்ந்தது. 
தீயசக்திக்கு பரிதாபம் காட்டியவர்கள் நீரினுள் மூழ்கிப் போனார்கள். 

பரிசலில் புகுந்த அந்த தீயசக்தி போல அமைதியான தமிழ்நாட்டு அரசியலில் புகுந்தவர் தான் திருக்குவளை தீயசக்தி என்னும் கருணாநிதி.  பரிசல் ஓட்டி எப்படி அந்தத் தீய சக்தியை பரிசலில் ஏற வேண்டாம் என்று தடுத்தானோ; அது போலவே கருணாநிதியின் தீய குணங்களை அறிந்த காரணத்தால் தான் பேரறிஞர் அண்ணா கூட "தம்பி வா, தலைமையேற்க வா" என்று நாவலர் நெடுஞ்செழியன் அவர்களைப் பார்த்துத் தான் அழைத்தாரே தவிர கருணாநிதியை அப்படி அழைக்கவில்லை. 

"நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்" என்று அண்ணா அவர்கள் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை ஜாடையாக அடையாளம் காட்டினாரே தவிர கருணாநிதியை அப்படி அடையாளம் காட்டவில்லை.  ஆனால், தமிழக மக்களின் பொல்லாத காலம் தமிழக அரசியலின் போதாத நேரம் கருணாநிதி என்னும் தீயசக்தியின் தந்திரங்கள் வென்றன.  அதன் விளைவை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். 

இவ்வாறு ஜெயலலிதா கூறினார். 
-------------