ஞாயிறு, 19 டிசம்பர், 2010

பத்து கட்டளைகள்



தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:

உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

2. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில்  மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

என்னிடத்தில் அன்பு கூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.

3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

4. ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.

ஆறு நாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள். அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும் உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மீருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற யாதொரு அன்னியனானாலும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.

கர்த்தர் ஆறு நாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். ஆகையால் கர்த்தர் ஓய்வு நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

5. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.

6. கொலை செய்யாதிருப்பாயாக.

7. விபசாரம் செய்யாதிருப்பாயாக.

8. களவு செய்யாதிருப்பாயாக.

9. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக.

10. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக. பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
--------------

புதன், 8 டிசம்பர், 2010

அழகான ராட்சஷி


என் காதலி ஒரு ராட்சஷி

அழகிலும் சரி, குணத்திலும் சரி.
-------------------

உண்மை அழகு


நான் பேரழகன்- என்னவளின்

பார்வை என் மீது- படும்

நேரத்தில் மட்டும்..........

காத்திருந்த காதல்


நீ என்னை விட்டு பிரிந்தது இதயத்திற்கு தெரிந்தாலும்

கண்களுக்கு தெரியவில்லை.

அதனால்தான் என்னவோ

இன்றாவது உன் அழைப்பு வராதா- என

காத்திருக்கிறது என் கண்கள்......

தொலைபேசியை நோக்கி. 
---------------------